districts

img

பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை, டிச.4  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலின அடிப்படையிலான வன் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து உரை யாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  உரையாற்று கையில்,   பாலின அடிப்படை யிலான வன்முறை உலகின் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றா கும். இது ஒவ்வொரு நாட்டி லும் , சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.ஒரு சமூகத்திற்குள் வேரூன்றியிருக்கும் ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஒவ்வொரு நபருக்கும் அச்சுறுத்தலை பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்படுத்துகிறது.

குழந்தை திருமணம், பாலியல்  கடத்தல் மற்றும் பெண் கொலைகள் அனை த்தும் பாலின அடிப்படையி லான வன்முறையின் வடி வங்களாக உள்ளது.பாலின  அடிப்படையிலான வன் முறை ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது செலுத்தப் பட்டாலும், மிகப்பெரிய அச் சுறுத்தலை எதிர்கொள்வது பெண்களும்,சிறுமிகளும் தான். பாலின சமத்துவ மின்மை மற்றும் பாலின அடிப்படையிலான வன்மு றையை நிவர்த்தி செய்வ தற்கான விழிப்புணர்வு பயிற்சிகள் பொதுமக்களின் பார்வையில் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உயர்த்த உதவும்.பாலின அடிப்ப டையிலான வன்முறையை அடையாளம் காணவும், உரையாற்றவும் மற்றும் பதி லளிக்கவும் வல்லுநர்க ளுக்கு பயிற்சி அளித்தல் ஆசிரியர்க ள்,இளைஞர் கள், சமூக சேவையாளர் கள்,காவல் துறையினர் மற்றும் சுகாதாரப் பாது காப்பு அலுவலர்கள் போன்ற வர்களுக்கு பயிற்சி அளிப்ப தன் மூலம் பாலின அடிப்படையிலான வன் முறையை முற்றிலும் நீக்குவ தற்கான முயற்சிதான் இந்த  விழிப்புணர்வு பயிற்சி கருத்த ரங்கம். இக்கருத்தரங்களை நல்ல முறையில் தலைமை யாசிரியர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.